குழந்தை பராமரிப்பாளர் வீட்டில் உயிரிழந்த 3 மாத பெண் குழந்தை; புத்ராஜெயாவில் சம்பவம்

புத்ராஜெயா:

புத்ராஜெயாவின் 15வது பகுதியில் உள்ள ஒரு குழந்தை பராமரிப்பாளர் வீட்டில் நேற்று முன்தினம் மூன்று மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அவ்வட்டார மக்களை சோகத்திற்குள்ளாக்கியுள்ளது.

குழந்தை பராமரிப்பாளரின் வீட்டிற்கு அனுப்பப்பட்ட இரண்டு நாட்களில், குழந்தை இறந்துவிட்டதாக புத்ராஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் அஸ்மாடி அப்துல் அஜீஸ் தெரிவித்தார்.

காலை 11.45 மணியளவில் சுயநினைவற்ற நிலையில் மருத்துவ அதிகாரி குழந்தையை பெற்றுக்கொண்டதாகவும், 30 நிமிடங்களுக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் குழந்தைக்கு CPR சிகிச்சையளிக்கப்பட்டது என்றும், ஆனால் மதியம் 12.16 மணிக்கு குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது,” என்று அவர் கூறினார்.

புத்ராஜெயா மருத்துவமனையின் மருத்துவ அதிகாரியின் அறிக்கையின் அடிப்படையில், பிரேத பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை மரணம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்படுகிறது என்று அவர் சொன்னார்.

இந்நிலையில், “பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை கூறுகையில், உயிரிழந்த குழந்தை தங்களின் முதல் குழந்தை என்றும், மார்ச் 18 அன்றுதான் முதன்முதலாக குழந்தை பராமரிப்பாளரிடம் அனுப்பப்பட்டதாகவும்,”கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here