கோலாலம்பூர்:
சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரிலுள்ள பல பகுதிகளில் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறையினரால் மேற்கொண்ட நடவடிக்கையில், RM10.8 மில்லியன் மதிப்புள்ள பல்வேறு வகை போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
கடந்த மார்ச் 19 ஆம் தேதி நடந்த இந்த சோதனையில், 38 வயதுடைய ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் காவல்துறை தலைவர், டத்தோ அலாவுடீன் அப்துல் மஜீட் கூறினார்.
குறித்த சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களில் 213 கிலோ சியாபு, 90 கிலோ எரிமின் 5 மாத்திரைகள், 3 கிலோ ஹெரோயின் ஆகியவை அடங்கும், இவை சுமார் 826,000 போதைப்பித்தர்கள் பயன்படுத்தப் போதுமானதாக இருக்கும் என்று அவர் கூறினார்.
குறித்த வழக்கு போதைபொருள் தடுப்பு சட்டம் 1952 இன் கீழ் விசாரிக்கப்படுவதாகவு, குறித்த சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக மார்ச் 26 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்று அவர் சொன்னார்.