குடும்பத்தினர் உறங்கிக் கொண்டிருந்த போது சுங்கை பூலோ மருத்துவமனையின் தங்கு விடுதியின் 16ஆவது மாடியில் இருந்து நான்கு வயது சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து மாலை 4.28 மணிக்கு தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாக சுங்கை பூலோ காவல்துறைத் தலைவர் ஹபீஸ் நோர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவரின் 30 வயதுடைய பெற்றோர் சம்பந்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், சம்பவம் நடந்தபோது குடும்பத்தினர் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தது கண்டறியப்பட்டது என்றார். பாதிக்கப்பட்டவரின் தாய் எழுந்தபோது, அவர் தனது இளைய மகன் அவர்களின் அறையில் திறந்த ஜன்னல் ஓரத்தில் நிற்பதை கண்டார். அவர் விழுவதற்கு முன்பு தாயால் மகனை காப்பாற்ற முடியவில்லை.
சம்பவ இடத்திலேயே சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவ அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டதாகவும், இறப்புக்கான காரணம் இன்னும் விசாரணையில் இருப்பதாகவும் ஹபீஸ் கூறினார். சம்பவம் தொடர்பாக திடீர் மரண விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது, மேலும் பாதிக்கப்பட்டவரின் பெற்றோரிடமும் விரைவில் வாக்குமூலம் எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
சம்பவம் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள், விசாரணைக்கு உதவ, அருகிலுள்ள காவல் நிலையத்தையோ அல்லது சுங்கை பூலோ காவல்துறை தலைமையகத்தை 03-6156 1222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.