ஜோகூர் பாரு: பாசீர் கூடாங் நெடுஞ்சாலையில் ஒரு டிரெய்லர் எதிர் பாதையில் சென்று குறைந்தது 10 வாகனங்களை மோதியதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட தகவல்களின்படி, திங்கள்கிழமை (மார்ச் 25) மாலை 4 மணியளவில் விபத்து ஏற்பட்டது. தென் ஜோகூர் பாரு காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் ரவூப் செலாமட் தொடர்பு கொண்டபோது விசாரணைகள் நடந்து வருகின்றன என்றார். இச்சம்பவம் தொடர்பான ஊடக அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றார்.
டிரெய்லர் தாமான் டயா அருகே சாலை தடுப்பின் மீது மோதியது. அதற்கு முன்பு எதிர் பாதையில் சென்று வாகனங்கள் மீது மோதியது.