ஹர்திக் பாண்டியா கேப்டனாக வந்ததிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் பல சர்ச்சைகள் வெடித்து வருகிறது. மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கிறார்.
மும்பை அணி ஐந்து முறை கோப்பையை வென்றதற்கு இவரும் காரணம். ஆனால், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அவர் பயிற்சியாளராக இருக்கும் போது மும்பை இந்தியன்ஸ் அணி, ஹைதராபாத் அணியை 277 ரன்கள் அடிக்கவிட்டது.
பந்துவீச்சாளர்கள் சரியாக செயல்படவில்லை என்று தொடர் புகார்கள் எழுந்தது. இந்நிலையில், கடந்த ஆட்டத்தில் தோல்வியை தழுவிய பிறகு வீரர்களும் கைகுலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
அப்போது மலிங்கா ஹர்திக் பாண்டியாவை கட்டி அணைக்க முயன்றார். ஆனால் ஹர்திக் பாண்டியா அவரை கையால் தள்ளிவிட்டு அவரைக் கண்டு கொள்ளாமல் சென்றார்.இதனால் அவமானப்பட்ட மலிங்கா பெரியதாக காட்டிக் கொள்ளாமல் அங்கிருந்து நகர்ந்துவிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.