புத்ராஜெயா: செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்த ஆண்டு ஹரிராயா திறந்த இல்ல நிகழ்ச்சி எதுவும் ஶ்ரீ பெர்டானாவில் நடைபெறாது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்தார். முந்தைய நடைமுறையில் இருந்து விலகி, கூட்டாட்சி அளவில் அவரது நிர்வாகம் திறந்த இல்லத்தை நடத்தாதது இது இரண்டாவது முறையாகும். அதற்குப் பதிலாக மாநிலங்கள் மற்றும் அமைச்சகங்கள் ஏற்பாடு செய்யும் திறந்த இல்லங்களில் கலந்து கொள்வதாக இன்றைய நிதியமைச்சின் மாதந்திர கூட்டத்தில் நிதியமைச்சருமான அன்வார் கூறினார்.
ஏஜென்சி மற்றும் துறைத் தலைவர்கள் தங்கள் ஹரிராயா விடுமுறையை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளவும், குடியிருப்பாளர்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களின் சொந்த நகரங்களில் உள்ள பிரச்சினைகளைக் கண்டறியவும் அன்வார் வலியுறுத்தினார். பள்ளிக்குச் செல்ல முடியாத ஏழைகள் (உதவி தேவைப்படுபவர்கள்) அல்லது ஆதரவற்றவர்களை அடையாளம் காண அவர்களுக்கு உதவ ஒரு வழியைக் கண்டறியுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.









