அம்னோ இளைஞரணி தலைவர் கைது!

கோலாலம்பூர்:

அம்னோ இளைஞரணி தலைவர் டாக்டர் முஹமட் அக்மல் சாலே இன்று சபாவின் கோத்தா கினாபாலுவில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை கோத்தா கினாபாலு மாவட்ட காவல்துறை தலைமையகம் (IPD) உறுதிப்படுத்தியுள்ளது.

சமூக ஊடகங்களில் வைரலான ஒரு வீடியோவின் அடிப்படையில், அவர் கோத்தா கினாபாலு அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்தவுடன் கைது செய்யப்பட்டார்.

மேலும் நாளை டாங் வாங்கி போலீஸ் தலைமையகத்தில் சாட்சியமளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவரது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அவர் என்ன காரணத்திற்காக கைது செய்யப்பட்டார் என்பது குறித்து அப்பதிவில் தெளிவாக கூறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here