வடமேற்கு சிரியாவில் தற்கொலைத் தாக்குதல்; ஈராக்கைச் சேர்ந்த முக்கிய பயங்கரவாதி கொலை

அம்மான்:

கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் சிரியாவின் வடமேற்குப் பகுதியில் ஈராக்கைச் சேர்ந்த முன்னணி பயங்கரவாதத் தலைவர் ஒருவர் தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 4) அந்தத் தற்கொலைத் தாக்குதல் நிகழ்ந்ததாகவும், விருந்தினர் விடுதிக்கு வந்த ஒருவர் வெடிகுண்டைக் கொண்டு தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் அபு மரியா அல் காஹ்டானி எனும் பயங்கரவாதி கொல்லப்பட்டதாக அங்கு செய்திகள் வெளியாகின.

இறந்தவர் மயிசர் அல் ஜபூரி எனவும், தற்கொலைத் தாக்குதலால் மோசமான காயங்களுக்கு ஆளான அவர் மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும், இந்தத் தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்ததாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here