ஈப்போ: கோப்பெங் அருகே வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் KM307 தெற்கு நோக்கி செல்லும் இடத்தில் டிரெய்லரின் பின்புறம் லோரி மோதியதில் இரண்டு லோரி உதவியாளர்கள் உயிரிழந்தனர். வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 5) அதிகாலை 5.55 மணியளவில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு, வங்காளதேசத்தைச் சேர்ந்த 26 மற்றும் 29 வயதுடைய இருவர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சக அதிகாரிகள் அறிவித்ததாக பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு மைய அதிகாரி முகமட் ஹமிடி மனாஸ் தெரிவித்தார்.
36 வயதான லோரி ஓட்டுநருக்கு கை எலும்பு முறிந்ததாக முகமட் ஹமிடி கூறினார். மாவு ஏற்றிச் சென்ற டிரெய்லரின் 57 வயது சாரதிக்கு காயம் ஏற்படவில்லை. நாங்கள் வந்து பார்த்தபோது, மரச்சாமான்களை ஏற்றிச் சென்ற மூன்று டன் எடையுள்ள லோரியில் சிக்கி பலியானவர்களைக் கண்டோம். உடல்கள் அடுத்த நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார். அதே நேரத்தில் லோரி ஓட்டுநர் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.