யாரும் பார்க்காத ஆறாவது பெருங்கடல் கண்டுபிடிப்பு.. ஆனால் யாராலும் போக முடியாது

மனிதர்கள் அறியாத பல விஷயங்கள் உலகில் இன்னும் உள்ளன. இதுவரை, இவற்றில் ஒன்று ஆறாவது பெருங்கடல். தற்போது விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகில் ஆறாவது பெருங்கடல் பற்றி இதுவரை பல்வேறு விஷயங்கள் கூறப்பட்டு வந்த நிலையில், அதன் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை தற்போது விஞ்ஞானிகள் அதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இருப்பினும், ஆறாவது பெருங்கடல் அமைந்துள்ள இடத்திற்கு இதுவரை எந்த மனிதனும் செல்ல முடியவில்லை என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அதற்கான காரணமும் மிகவும் சுவாரஸ்யமானது ஆகும். உண்மையில் இந்தப் பெருங்கடல் பூமிக்கு மேல் அல்ல, பூமிக்கு அடியில் அமைந்துள்ளது. இது பூமியின் மேற்பரப்பில் இருந்து 700 கிலோமீட்டர் தொலைவில் ரிங்வுடைட் என்ற பாறையின் கீழ் அமைந்துள்ளது.

இந்த கடல் பூமியின் மேற்பரப்பிற்கு கீழே நீல நிற பாறையில் மறைந்துள்ளது. 2 ஆயிரம் நில அதிர்வு அளவீடுகள் மூலம் 500 நிலநடுக்கங்களை ஆய்வு செய்த பிறகு கண்டறிய முடியும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here