கிள்ளான்:
இன்று (ஏப்ரல் 18) மாலை 6 மணியளவில் தொடங்கிய கனமழையைத் தொடர்ந்து, இப்பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கெப்போங் மற்றும் கோலாலம்பூர் நகர்பகுதி உட்பட பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது.
இந்நிலையில் ஜாலான் கேசிங் அருகே ஒரு விபத்து ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதனால் அங்கு போக்குவரத்து நிலைகுத்தியது என்று, ஆஸ்ட்ரோ டிராஃபிக் ஓர் அறிக்கையில் கூறியது.
இந்த வழித்தடங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் தங்கள் பயணங்களில் தாமதம் ஏற்படும் என்பதை கருத்தில் கொள்ளுமாறு அது மேலும் கூறியுள்ளது.