அடுத்தடுத்து அதிர்ச்சி! !!
தொரட்டி படத்தின் நாயகனும், தயாரிப்பாளருமான ஷமன் மித்ரு கொரானா தொற்றால் உயிரிழந்தார்.
கொரோனா தொற்றுக்கு முதல் அலையிலும், இரண்டாவது அலையிலும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா 2ஆவது அலை மிகத்தீவிரமாக உள்ளது. முதல் அலையின் போது உயிரிழப்பு குறைவாக இருந்த நிலையில் தற்போது நாள்தோறும் 400க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
இப்போது தான் உயிரிழப்பு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. வீரியம் மிக்க வைரஸ் என்பதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக திரையுலகை சேர்ந்த பலரும் நோய் தொற்றுக்கு ஆளாகி பலியாகி வருகின்றனர்.
முதல் அலையின் போது எஸ்பிபி உயிரிழந்தார். 2ஆவது அலையில் நடிகர் மாறன், தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர், சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ், நடிகர் பாண்டு என கொரோனாவால் உயிரிழந்த திரைப்பிரபலங்களின் பட்டியல் நீள்கிறது.
புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக்குழு, காலா, அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் சமீபத்தில் உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து நடிகர் அம்மா கிரியேஷன்ஸ் வெங்கட் கொரோனா தொற்றால் காலமானார்.
இந்நிலையில் தொரட்டி படத்தின் நாயகனும், தயாரிப்பாளருமான ஷமன் மித்ரு கொரானா தொற்றால் உயிரிழந்துள்ளார். இதனால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.