தந்தையும் இரு பிள்ளைகளும் நீரில் மூழ்கி உயிரிழந்த துயரம்

பத்தாங் காலி அருகே உள்ள சுங்கை பாலேக் என்ற இடத்தில் வார இறுதி சுற்றுலா சென்றிருந்த தந்தையும் அவரது இரண்டு பிள்ளைகளும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் வான் எம்.டி ரசாலி வான் இஸ்மாயில் கூறுகையில், மதியம் 1.09 மணியளவில் திணைக்களத்திற்கு ஒரு பேரிடர் அழைப்பு வந்ததைத் தொடர்ந்து. அவர்களின் உடல்கள் இன்று மதியம் 1.35 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டன.

ஷா ஆலம் மற்றும் போர்ட் கிள்ளான் நீர் மீட்புக் குழுவின் உதவியுடன், கோல குபு பாருவில் இருந்து 12 பேர் கொண்ட குழு, அழைப்பைத் தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தது. பாதிக்கப்பட்ட மூன்று பேர் ஒரு ஆடவர் (தந்தை) மற்றும் அவரது இரண்டு குழந்தைகள், ஒன்பது வயதுடைய ஒரு மகளும் மகனும் மூழ்கி இறந்தனர்  என்று ஆரம்ப கட்ட அறிக்கைகள் தெரிவித்தன.

அவர்கள் காணாமல் போன இடத்திலிருந்து 30 மீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டனர். மேலும் சம்பவம் நடந்தபோது அதிக நீர் பெருக்கு இல்லை என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மூவரும் இறந்துவிட்டதாக சுகாதார அமைச்சின் குழு உறுதிப்படுத்தியதுடன், அவர்களது உடல்கள் மேலதிக நடவடிக்கைக்காக கோலா குபு பாரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here