கூச்சிங்:
2024 தேசிய பத்திரிகையாளர்கள் தினத்தை (ஹவானா) முன்னிட்டு நாளை (மே 25) முதல் கொண்டாடுவதற்காக சுமார் 1,000 உள்ளூர் மற்றும் அனைத்துலக ஊடகப் பயிற்சியாளர்கள் கூச்சிங்கில் ஒன்றுகூடத் தொடங்கியுள்ளனர்.
இக்கூட்டத்தில் ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் திரைக்குப் பின்னால் பணிபுரிபவர்கள் மற்றும் உள்ளூர் மற்றும் அனைத்துலக ஊடக சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் மூன்று நாட்கள் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார்கள்.
கம்போடியா, இந்தோனேசியா, ஜப்பான், குவைத், புருனே, பிலிப்பைன்ஸ், திமோர் லெஸ்டே, வியட்நாம், சீனா, கொரியா மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் ஊடகப் பிரதிநிதிகளுடன் நம்நாட்டு ஊடக பணியாளர்களும் கலந்துகொள்வார்கள்.
சனிக்கிழமை (மே 25) சரவாக் மாநில நூலகத்தில் ‘ஜெலாஜா ஹவானா 2024 பெர்சாமா சிஸ்வா’ நிகழ்ச்சியுடன் விழாக்கள் தொடங்கும், இதில் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்சில் கலந்து கொள்கிறார்.
2018 ஆம் ஆண்டில் தலைநகரில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹவானா நிகழ்வு இம்முறை நான்காவது தடவையாக (2024) சரவாக்கில் நடைபெறுகிறது. முன்னதாக 2022 ஆம் ஆண்டு மலாக்காவிலும் 2023 பேராக்கிலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
























