இங்கிலாந்தில் வரும் ஜூலை 4ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். அவர் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு பொதுத் தேர்தல் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
2016ஆம் ஆண்டு பிரெக்சிட் வாக்கெடுப்புக்குப் பின் நடைபெற உள்ள 3ஆவது பொதுத் தேர்தலாகும். இதையடுத்து, தேர்தல் பிரசாரத்தில் அனைத்துக் கட்சியினரும் தீவிரமாக வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் ரிஷி சுனக் நேற்று தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில், எதிர்காலத்தில் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி அமைத்தால் தேசிய சேவை கட்டாயமாக்கப்படும்.
இது தேசிய உணர்வை உருவாக்கும். கட்டாய தேசிய சேவையின் கீழ் 18 வயது இளைஞர்கள் ஒரு ஆண்டுக்கு ராணுவத்தில் சேரவேண்டும். இதற்காக அரசு ஒவ்வொரு ஆண்டும் 2.5 பில்லியன் பவுண்ட்ஸ் செலவிடும் என தெரிவித்தார்.