புத்ராஜெயா: நாட்டைக் காப்பாற்ற இலக்கு வைக்கப்பட்ட மானியங்களை அமல்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தற்காத்து பேசினார். நாட்டின் நலனுக்காகவே மக்கள் விரும்பத்தகாத பல முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது என்றார்.
இலக்கு வைக்கப்பட்ட மானியங்களை யார் (செயல்படுத்த) விரும்புகிறார்கள்? நாம் என்ன செய்தாலும், எல்லா வகையான பொய்கள் மற்றும் குற்றச்சாட்டுகளால் தாக்கப்படுவோம் என்பதை நாம் உணர வேண்டும். இதற்கு முன்னர் அனைத்து பிரதமர்களும் இலக்கு மானியங்களை செயல்படுத்த ஒப்புக்கொண்டனர். ஆனால் அவ்வாறு செய்வதற்கான அரசியல் விருப்பம் இல்லை. திங்கள்கிழமை (ஜூன் 10) Dewan De’ Seri Endon, Puspanitapuri நடைபெற்ற பிரதமர் துறையின் மாதாந்திர கூட்டத்தில், நாட்டைக் காப்பாற்ற இது செய்யப்படுகிறது, எங்களுக்கு வேறு வழியில்லை என்று அன்வார் கூறினார்.