கோலாலம்பூர்: முன்னாள் நிதியமைச்சர் துன் டெய்ம் ஜைனுதின் மற்றும் அவரது குடும்பத்தினர் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகள் முடக்கியிருப்பது தொடர்பில் நீதித்துறை மறுஆய்வு செய்ய அனுமதி கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஜூன் 6 ஆம் தேதி இங்குள்ள உயர் நீதிமன்றத்தில் மெசர்ஸ் ஷாரிப் நிஜாமுதீன் மூலம் விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது. அவர்கள் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்ஏசிசி) மற்றும் அரசாங்கத்தை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டனர்.









