7,000 வெள்ளி மதிப்புள்ள போதை மாத்திரைகளுடன் மியான்மார் நாட்டவர் கைது!

கோத்தா பாரு:

நேற்று, பாசீர் பூத்தேயில் 530 யாபா மாத்திரைகளுடன் மியன்மார் நாட்டவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இரவு 7.30 மணியளவில் மீன்பிடி படகுத்துறையில் வைத்து 30 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பாசீர் பூத்தே காவல்துறைத் தலைவர் ஜெய்சுல் ரிசல் ஜகாரியா தெரிவித்தார்.

சந்தேக நபரின் உடமைகளில் இருந்து குறித்த மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

“வேலையற்ற அந்த ஆடவர் மெத்தாம்பேட்டமைன் பாவித்திருப்பதாக சோதனையில் கண்டறியப்பட்டது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட அந்த நபர் ஜூன் 20 வரை ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39B இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் ஜெய்சுல் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here