மஇகா உயர் பதவிகளுக்கான போட்டி: டத்தோஸ்ரீ எம். சரவணன் தேசிய துணைத் தலைவராக போட்டியின்றி தேர்வு

கோலாலம்பூர்:

மஇகா உயர் பதவிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் மஇகா தலைமையகத்தில் இன்று காலை 11 மணி தொடங்கி நடைபெற்றது.

கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் முடிவுகளை அறிவித்தார்.

டத்தோஸ்ரீ எம். சரவணன் தேசிய துணைத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

மூன்று உதவி தலைவர் பதவிகளுக்கு டத்தோ டி.மோகன், டத்தோ தோ.முருகையா, டத்தோ எம்.அசோகன், டத்தோ நெல்சன் ரெங்கநாதன் ஆகிய நால்வர் களமிறங்கியுள்ளனர்.

21 மத்திய செயலவை இடங்களுக்கு 45 பேர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நமது செய்தியாளர்கள்:
எஸ்.வெங்கடேஷ், ராமேஸ்வரி ராஜா

படங்கள்: பி.மலையாண்டி, எல்.கே. ராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here