நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் தாவாவ் SK அபாகா பள்ளியில் வகுப்பறை கட்டிடம் எரிந்து நாசம்

தாவாவ்:

ங்குள்ள செக்கோலா கெபாங்சான் (SK ) அபாகா பள்ளியில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் கட்டிடம் எரிந்து நாசமானது.

நள்ளிரவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் இரண்டாம் ஆண்டு பிள்ளைகளின் வகுப்பறைகள் உள்ள கட்டடம் இடிந்துள்ளதாக தெரியவருகிறது என்று மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் ஜெமிஷின் உஜின் கூறினார்.

நள்ளிரவு 12.06 மணிக்கு சம்பவம் குறித்து தமது குழுவிற்கு அழைப்பு வந்தது , அதன் பிறகு 28 உறுப்பினர்களைக் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது என்று அவர் சொன்னார் .

“தமது குழு அங்கு வந்தவுடன், நிரந்தரமற்ற பள்ளிக் கட்டடத் தொகுதி முழுவதுமாக தீப்பிடித்து எரிந்தது கண்டறியப்பட்டது. தீயை அணைக்கும் நடவடிக்கை தீயணைப்பு இயந்திரத்தின் தொட்டியில் இருந்து தண்ணீரைப் பயன்படுத்தியது, மேலும் 50 நிமிடங்களுக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது,” என்று அவர் இன்று காலை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார். .

நள்ளிரவு 1.23 மணியளவில் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டதாகவும், இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் ஜெமிஷின் கூறினார்.

மேலும் சம்பவத்திற்கான காரணம் மற்றும் நஷ்டத்தின் அளவு இன்னும் விசாரணையில் உள்ளது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here