வளம் தரும் வளர்பிறைச் சதுர்த்தி வழிபாடு

முழு முதற் கடவுளான விநாயகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான விரத நாள் சதுர்த்தி ஆகும். வளர்பிறை, தேய்பிறை என மாதத்திற்கு இரண்டு சதுர்த்தி திதிகள் வருவதுண்டு. இவற்றில் தேய்பிறையில் வரும் சதுர்த்தியை, சங்கடஹர சதுர்த்தி என சொல்வதுண்டு. இந்த நாளிலேயே பெரும்பாலானவர்கள் விநாயகரை விரதம் இருந்து, வழிபடுவது உண்டு. கஷ்டங்கள், பிரச்சனைகள், தடைகள் நீங்க வேண்டும் என்கிறவர்கள் தேய்பிறையில் வரும் சங்கடஹர சதுர்த்தியில் வழிபடலாம். அதே சமயம் வாழ்க்கையில் வளம், நலம் பெருக வேண்டும், வளர்ச்சிகள் ஏற்பட வேண்டும், நன்மைகள் பெருக வேண்டும், மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என நினைப்பவர்களை விநாயகரை வளர்பிறை சதுர்த்தியில் வழிபடுவது சிறப்பானதாகும்.

வளர்பிறை சதுர்த்தி ஜூலை 2024 :

வளர்பிறை சதுர்த்தி வரும் நாளில் மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் இந்த வழிபாட்டினை செய்வது சிறப்பானதாகும். இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் வளர்பிறை சதுர்த்தியானது ஜூலை 09ம் தேதி செய்வாய்கிழமை வருகிறது. செவ்வாய்கிழமையில் வருவதால் இதை அங்கார சதுர்த்தி என்றும் சொல்லுவதுண்டு. ஜூலை 09ம் தேதி காலை 7 மணிக்கு துவங்கி, ஜூலை 10ம் தேதி காலை 08.31 வரை சதுர்த்தி திதி உள்ளது. நாள் முழுவதும் சதுர்த்தி திதி இருந்தாலும் மாலையிலேயே சதுர்த்தி வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும். வீட்டிலேயே இந்த சதுர்த்தி வழிபாட்டினை மேற்கொள்ளலாம்.

வளர்பிறை சதுர்த்தி வழிபாடு :

மாலையில் குளித்து விட்டு, சிறிது மஞ்சள் எடுத்து தண்ணீரில் கலந்து நிலை வாசலில் வைத்து, குங்கும பொட்டு வைத்து தீப தூபம் காட்டி வழிபட வேண்டும். பிறகு வீட்டின் பூஜை அறைக்கு சென்று, சிறிது மஞ்சள் தூள் எடுத்து அதோடு நவதானியங்களை கலந்து பிள்ளையார் போல் பிடித்து வைக்க வேண்டும். பிள்ளையாருக்கு முன் சிறிய மூஷிக வாகனமும் பிடித்து வைக்க வேண்டும். வீட்டில் நவதானியம் இல்லை என்றால் என்ன தானியம் உள்ளதோ அதை கொண்டு பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும்.

அதற்கு பிறகு, பிள்ளையாரிடம் மனதார வேண்டிக் கொண்டு, கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு மந்திரங்களையும் தலா 108 முறை சொல்ல வேண்டும்.

“ஸ்ரீ சக்தி கணபதியே துணை!
ஸ்ரீ சக்தி கணபதியே போற்றி
ஸ்ரீ சக்தி கணபதியே சரணம்”

மந்திரம்:

” ஓம் கணேஷ் ரின்னம் ச்சிந்தி வாரேண்யம் ஹுங் நம பட்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here