துபாய்: துபாயில் புதன்கிழமையன்று (ஜூலை 24) இடம்பெற்ற பரிசுச்சீட்டுக் குலுக்கலில் துபாய் தொழிலதிபர் ஒருவருக்கும் இந்தியர் ஒருவருக்கும் தலா 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு விழுந்தது. சயீத் முகம்மது யூசுஃப் 47, என்ற துபாய் தொழிலதிபர் கடந்த ஐந்தாண்டுகளாக ‘துபாய் டூட்டி ஃபிரீ மில்லேனியம் மில்லியனர்’ என்ற அந்தக் குலுக்கலுக்கான பரிசுச்சீட்டுகளைத் தவறாது வாங்கி வந்தார்.
அதனைத் தொடர்ந்து நடந்த ‘ஃபைனஸ்ட் டிரா’ குலுக்கலிலும் நால்வருக்கு விலையுயர்ந்த சொகுசு வாகனங்கள் பரிசாகக் கிடைத்தன. அவர்களில் இந்தியாவைச் சேர்ந்த 48 வயது மகேஷ் பிரபாகரனும் 53 வயது ஹமீத் அம்மச்சீத்துவலப்பில்லும் அடங்குவர். அவ்விருவருக்கும் பிஎம்டபிள்யூ கார் பரிசாகக் கிடைத்தது.





















