பினாங்கு, கப்பளா பத்தாஸ் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வாகன நிறுத்துமிடம் தொடர்பில் வைரலான வீடியோவுடன் தொடர்புடைய 25 மற்றும் 38 வயதுடைய இரண்டு பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். ஜூலை 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடந்த சம்பவம் குறித்து இரண்டு புகார்கள் கிடைத்ததையடுத்து போலீசார் நேற்று கைது செய்ததாக வடக்கு செபராங் பிறை போலீஸ் தலைவர் அனுவார் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
பினாங்கு கப்பாளா பத்தாஸ் உள்ள சன்ஷைன் பல்பொருள் அங்காடியின் வாகன நிறுத்துமிடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். வாகன நிறுத்தம் தொடர்பாக ஏற்பட்ட அதிருப்தியே இந்த சம்பவத்திற்கு காரணம்.
குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 160, பொது இடங்களில் அநாகரீகமாக நடந்து கொண்டதற்காக சிறு குற்றச் சட்டம் 1955 இன் பிரிவு 14 மற்றும் நெட்வொர்க் வசதிகளை முறையற்ற முறையில் பயன்படுத்தியதற்காக தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998 இன் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது என்றார்.
பொதுமக்கள் ஒழுக்கத்தை கடைபிடிக்குமாறு போலீசார் வலியுறுத்துகின்றனர். தகவல் தெரிந்தவர்கள், விசாரணை அதிகாரியான நூர்ஸ்யாஹிரா சராஹானியை 04-576 2222 என்ற எண்ணில் அல்லது அருகிலுள்ள எந்த காவல் நிலையத்திலும் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் மேலும் கூறினார்.
65 வினாடிகள் கொண்ட வீடியோவில், ஒரு பூ ஜாக்கெட் அணிந்த ஒரு பெண், படம் எடுக்கும் நபருக்கு சொந்தமானதாகக் கூறப்படும் காரின் உரிமத் தகட்டை படம் எடுப்பதைக் காணலாம். அவர் தனது பார்க்கிங் இடத்தைத் திருடியதாகக் குற்றம் சாட்டினார். மோதலானது கடுமையான வாக்குவாதமாக மாறுகிறது. இரு பெண்கள் கத்துவதும் அதன் பின் அவர்களில் ஒருவர் மற்றொருவர் ஓட்டி வந்த காரில் ஏறி அந்த இடத்தை விட்டு வெளியேறுவதை காண முடிகிறது.









