கோலாலம்பூர்:
கார் ஒன்று பல்நோக்கு வாகனம் மீது மோதி நொருங்கியதில் தாயும் மகளும் உயிரிழந்தனர்.
பின் இருக்கையில் அமர்ந்திருந்த இன்னொரு மகள் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று பேராக் மாநில தீயணைப்பு, மீட்பு இலாகா நடவடிக்கை பிரிவு உதவி இயக்குனர் சபோரொட்ஸி நோர் அமாட் கூறினார்.
இன்று காலை 7.36 மணியளவில் ஜாலான் கோலகங்சார் – மானோங்கில் நிகழ்ந்த இந்த விபத்தில் முன் இருக்கையில் அமர்ந்திருந்த தாயும் மகளும் இருக்கைக்கு அடியில் சிக்கிக்கொண்டனர் என்று அவர் சொன்னார்.
பல்நோக்கு வாகன ஓட்டுநர் காயமேதுமின்றி உயிர் தப்பினார்.









