GISBH தலைவரின் மகன் உட்பட 5 பேர் நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது கைது

குளோபல் இக்வான் சர்வீசஸ் அன்ட் பிசினஸ் ஹோல்டிங்ஸ் (GISBH) தலைவரின் மகனும் இன்று நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது கைது செய்யப்பட்ட ஐந்து பேரில் அடங்குவார் என்று போலீஸ் படைத்தலைவர் ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்தார். இன்று மாலை 6 மணியளவில் மலேசியா-தாய்லாந்து எல்லையில் GISBH சின்னம் மற்றும் துபாய் உரிமத் தகடுகளைக் கொண்ட இரண்டு மோட்டார் ஹோம்களை வடக்கு மண்டல எல்லைப் புலனாய்வுப் பிரிவு கண்டறிந்ததாக அவர் தெரிவித்தார்.

சோதனையில் வாகனங்கள் தாய்லாந்து நோக்கிச் செல்லும் புக்கிட் காயு ஹித்தாம் குடிவரவு, சுங்கம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு வளாகத்தை நோக்கி நகர்வதைக் காட்டியது. கைது செய்யப்பட்ட ஐந்து பேரில் GISBH தலைவரின் மகனும் அடங்குவர். அவர்கள் 28 முதல் 41 வயதுக்குட்பட்டவர்கள் என்றார். இரண்டு வாகனங்களையும் கைப்பற்றிய போலீசார் முதற்கட்ட விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக ரஸாருதீன் கூறினார். கைது செய்யப்பட்டவர்களும், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களும் மேலதிக நடவடிக்கைக்காக குபாங் பாசு போலீஸ் தலைமையகத்திற்கு கொண்டு வரப்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here