திங்கட்கிழமையில் இதை மட்டும் பண்ணுங்க…வாழ்க்கையே மாறும்

சிவ பெருமான், பக்தர்களின் பிரார்த்தனைக்கு எளிதில் மனம் இறங்கி, அருள் செய்யக் கூடியவர். சிவ பெருமானை வழிபடுவதற்கு ஏற்ற நாளான திங்கட்கிழமையில் சில எளிமையான விஷயங்களை செய்தால் சிவனின் அருளையும், துன்பம் இல்லாத இன்பகரமான வாழ்க்கையையும் பெற முடியும்.

திங்கட்கிழமை என்பது சிவ பெருமானுக்குரிய வழிபாட்டு நாளாகும்.கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரமான திங்கட்கிழமை மட்டுமல்ல, அனைத்து திங்கட்கிழமைகளிலும் சிவ பெருமானை விரதம் இருந்து வழிபடுவது சிறப்பானது. சிலர் திங்கட்கிழமை தோறும் விரதம் இருப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். இதனை சோமவார விரதம் என்பார்கள். சிவ பெருமானுக்குரிய எட்டு முக்கியமான விரதங்களில் ஒன்று சோமவார விரதம். திங்கட்கிழமையில் விரதம் இருக்க முடியாவிட்டாலும் எளிமையாக வழிபட்டாலும் சிவனின் அருளை பெற முடியும்.

திங்கட்கிழமை என்பது சந்திர பகவானுக்குரிய நாளாகும். ஜோதிட சாஸ்திரப்படி, சந்திரன் தான் நம்முடைய மனக் கவலை, மனக்குழப்பம், மன அழுத்தம், பதற்றம், தடுமாற்றம் போன்றவற்றிற்கு காரணமான கிரகமாக சொல்லப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் தீராத மனக்கவலை, வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு கழுத்தை நெறிக்கும் கஷ்டம், வெளியில் வர முடியாத துன்பம், மனஅழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் அதற்கு தீர்வு கிடைக்க சிவ பெருமான் திங்கட்கிழமைகளில் வழிபடலாம்.

சிவ பெருமான் கருணையே வடிவமானவர். பக்திக்கு உடனடியாக மனம் இறங்கி, பக்தர்களின் துன்பங்களை போக்கி, இன்பத்தை வழங்கக் கூடியவர். சிவன் என்ற சொல்லுக்கே ஆனந்தம் அளிப்பவன் என்று தான் பொருள். மகிழ்ச்சி என்பது தற்காலிகமானது. ஆனால் ஆனந்தம் என்பது எப்போதும் நிலையானது. அப்படி எப்போது மாறாத, நிலையான இன்பத்தை வழங்கக் கூடியவர் தான் சிவ பெருமான். சிவனின் அருளை பெறுவதற்கு, திங்கட்கிழமைதோறும் மிக எளிமையான சில விஷயங்களை செய்தாலே போதும், சிவனின் அருளை பெற்று விடலாம்.

* ஒவ்வொரு திங்கட்கிழமையும் அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு செல்லுங்கள். தடைகள் வந்தாலும் எப்படியாவது சிவன் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். இப்படி தன் மீது உறுதியான பக்தி கொண்டவர்களை சிவ பெருமானுக்கு மிகவும் பிடிக்கும்.

* சிவ லிங்கத்திற்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தும், வில்வ இலைகளை சாற்றி வழிபடுவதும் நல்லது.

* சிவ லிங்கத்திற்கு சுத்தமான நீர் கொண்டு அபிஷேகம் செய்யுங்கள். அல்லது சிவனின் அபிஷேகத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கிக் கொடுத்தோ அல்லது திங்கட்கிழமைகளில் சிவனுக்கு நடக்கும் அபிஷேகத்தில் கலந்து கொண்டு, கண்ணார தரிசனம் செய்யுங்கள்.

* திங்கட்கிழமைகளில் சிவன் கோவிலுக்கு சென்றோ அல்லது வீட்டில் விளக்கேற்றி வைத்தோ “ஓம் நம சிவாய” என்ற பஞ்சாட்சர மந்திரத்தை எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை சொல்லுங்கள். சிவனின் அருளை பெற வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் மனதில் வைத்து பஞ்சாட்சரம் ஜபம் செய்வது சிறப்பு.

* சிவனை வழிபடும் போது பார்வதி, விநாயகர், முருகப் பெருமான் ஆகியோரையும் சேர்த்தே வழிபடுவது நல்லது.

* தினமும் அல்லது திங்கட்கிழமைதோறும் சிவ புராணம், சிவ கவசம், திருவாசகம் போன்ற சிவனுக்குரிய பதிகங்களை பாராயணம் செய்யலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here