இந்தி படங்களில் நடிக்க கூடாதுனு முடிவு பண்ணிட்டேன் – அல்லு அர்ஜூன்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன். இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் புஷ்பா 2 திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது. தெலுங்கு மட்டுமின்றி இந்தப் படம் பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதையொட்டி, படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு மும்முரம் காட்டி வருகிறது.

இதனிடையே இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்கள் வெளியிடப்பட்டன. மூன்று பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. புஷ்பா படத்தின் முதல் பாகம் அதிக வசூல் செய்த நிலையில், இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

புஷ்பா 2 படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் இந்தி மொழியிலும் வெளியாகிறது. இந்தப் படத்தின் இந்தி பதிப்பில் அல்லு அர்ஜூன் கதாபாத்திரத்திற்கு நடிகர் ஸ்ரேயஸ் தால்பேட் டப்பிங் செய்துள்ளார்.

இது குறித்து பேசிய அல்லு அர்ஜூன், இனி இந்தி படங்களில் நடிக்கவே கூடாது என முடிவு செய்துள்ளேன். அது மிகவும் கடினமாக இருக்கிறது. என் வாழ்நாளில் ஒன்றிரண்டு இந்தி படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று நினைக்கிறேன் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here