ஹலால் தொழிற்துறையை மேம்படுத்த திமோர் லெஸ்தே நாட்டிற்கு உதவ மலேசியா தயாராக உள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
உலகளவில் 3 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாயை ஹலால் தொழிற்துறை கொண்டு வர மலேசியா உதவிக்கரம் நீட்டும் நிலையான, சீரான பொருளாதார ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கிறது.

கூட்டு வர்த்தக பொருளாதாரத்தை உருமாற்றம் செய்ய இரு நாடுகளுக்கிடையில் முதலீட்டு நடவடிக்கைகள், வாய்ப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூட்டறிக்கையின் வாயிலாக அவர்கள் கேட்டுக்கொண்டனர். முன்னதாக மலேசியாவிற்கு மூன்று நாட்கள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்ட திமோர் லெஸ்தே நாட்டின் பிரதமர் புத்ராஜெயாவில் பிரதமர் அன்வாரைச் சந்தித்தார்.




















