விபச்சாரம் மற்றும் குற்றவியல் எதிர்ப்பு நடவடிக்கை; ஜோகூரில் 189 பேர் கைது

ஜோகூர் பாரு:

ஜோகூர் பாரு மற்றும் இஸ்கண்டார் புத்திரியைச் சுற்றி விபச்சாரம் மற்றும் குற்றவியல் எதிர்ப்பு (ஓப் நோடா காஸ்) கீழ் வெள்ளிக்கிழமை முதல் நேற்று வரை நடத்தப்பட்ட ஆறு சோதனைகளில் 177 வெளிநாட்டினர் உட்பட 189 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த நடவடிக்கையில் 14 மூத்த அதிகாரிகள் மற்றும் 54 ஜூனியர் அதிகாரிகளை உள்ளடக்கியது என்றும், இந்த நடவடிக்கையில் விபச்சாரம், விருந்தினர் உறவு அதிகாரி அல்லது GRO நடவடிக்கைகள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களில் குற்றவியல் கும்பல் நடவடிக்கைகள் ஆகியவற்றை குறிவைத்ததாக ஜோகூர் காவல்துறை தலைவர் எம் குமார் கூறினார்.

இதன் விளைவாக, 18 முதல் 63 வயதுக்குட்பட்ட 11 உள்ளூர் ஆண்கள், ஒரு உள்ளூர் பெண், 16 வெளிநாட்டு ஆண்கள் மற்றும் 161 வெளிநாட்டு பெண்கள் பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டனர்.

“ஆரம்ப சிறுநீர் பரிசோதனையில் 16 உள்ளூர் ஆண்களும் 12 வெளிநாட்டு பெண்களும் போதைப்பொருள் பாவித்திருப்பதாக கண்டறியப்பட்டனர் ” என்று குமார் மேலும் கூறினார்.

“குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 117 இன் கீழ் அனைத்து உள்ளூர் சந்தேக நபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும், அதே நேரத்தில் செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாதது, அனுமதியின்றி பணிபுரிந்ததற்காக கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் குடிநுழைவு சட்டம் 1959/63 இன் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here