
கோலாலம்பூர்: காணாமல் போன இந்திரா காந்தியின் மகள் பிரசானா தீக்ஷாவைக் கண்டுபிடிக்க அவசர போலீஸ் நடவடிக்கை எடுக்கக் கோரி சனிக்கிழமை (நவம்பர் 22) ஆர்வலர்கள் குழு ஒன்று கூடியது. அவர்கள் தசாப்த கால தேடுதலில் முன்னேற்றம் இல்லாததை விமர்சித்து, “Pulangkan Prasana kepada ibunya!” பிரசானா தாயுடம் சேருங்கள் என்றும் போலீசார் உடனே இப்போதே செயல்பட வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.
போராட்டக்காரர்கள் இந்திரா காந்தி மற்றும் அவரது மகள் குழந்தையாக இருந்தபோது எடுத்த படங்கள் அடங்கிய பதாகைகளுடன் வந்தனர். நீண்ட காலமாக செயல்படாதது தாய்க்கு தேவையற்ற துன்பத்தை ஏற்படுத்தியதால், நீதிமன்ற உத்தரவுகளை தாமதமின்றி அமல்படுத்துமாறு அதிகாரிகளை அவர்கள் வலியுறுத்தினர். மேலும், காவல்துறையினரிடமிருந்து உடனடி அறிவிப்புகள், பொறுப்புக்கூறலையும் அவர்கள் கோரினர்.
புக்கிட் அமான் காவல் நிலையத்தில் மதியம் 12 மணிக்கு காவல் துறைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமது காலித் இஸ்மாயிலை அந்தக் குழு சந்திக்க விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டதாக இந்திரா காந்தி அதிரடிக் குழுவின் தலைவர் அருண் துரைசாமி ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.







