ஊழியர்களுக்கு சொக்சோ பங்களிப்புகளைத் தவிர்க்கும் விமான நிறுவனங்களுக்கான விரைவான ஆய்வு மேற்கொள்ளப்படும்

கோலாலம்பூர்: தங்கள் ஊழியர்களுக்கான சொக்சோவை பங்களிக்கத் தவறிய விமான நிறுவனங்கள் உடனடியாக மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையத்திற்கும் (Mavcom) சமூகப் பாதுகாப்பு அமைப்புக்கும் (Perkeso) இடையிலான புதிய ஒப்பந்தத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்படும்.

Mavcom இடைக்காலத் தலைவர் ஶ்ரீபுதீன் காசிம் கூறுகையில், ஒரு சில தவறான நிறுவனங்கள் மட்டுமே இந்த  செயலில்  ஈடுபட்டுள்ளன. ஆனால் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) சிறந்த மேற்பார்வை மற்றும் விமான விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்யும் என்று கூறினார். கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு, சில ஊழியர்களுக்கு நிறுவனம் சொக்சோ பங்களிப்பினை வழங்க தவறியதை Mavcom கண்டறிந்துள்ளது என்றார்.

விஸ்மா பெர்கெசோவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, “அவர்களில் சிலருக்கு (விமான நிறுவனங்கள்) சிக்கல்கள் உள்ளன. ஆனால் அவை எவ்வாறு தீர்க்க திட்டமிடுகின்றன என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம் என்று அவர் கூறினார். மாவ்காமின் விசில்ப்ளோவர் தளத்தின் மூலம் சம்பள தாமதங்கள் அல்லது செலுத்தப்படாத பெர்கெசோ மற்றும் EPF பங்களிப்புகளைப் புகாரளிக்க விமானப் போக்குவரத்துத் துறையில் உள்ள ஊழியர்களை அவர் ஊக்குவித்தார்.

பெர்கேசோ தலைமை நிர்வாக அதிகாரி அஸ்மான் அஜிஸ் முகமது கூறுகையில், இந்த கூட்டாண்மையானது தரவுகளை குறுக்கு சோதனை செய்து சரியான நேரத்தில் நடவடிக்கையை உறுதி செய்ய இரு நிறுவனங்களையும் அனுமதிக்கும். நாங்கள் ஆரம்பகால தலையீட்டில் கவனம் செலுத்துகிறோம். முதலாளிகள் முதல் நாளிலிருந்தே பங்களிக்கத் தொடங்க வேண்டும் என்று அவர் கூறினார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வேலைவாய்ப்பை மேம்படுத்துதல், வேலை பொருத்தத்திற்கு உதவுதல் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையின் தேவைகளுக்கு ஏற்ப வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அஸ்மான் கூறினார்.

தற்போது தரைப் பணியாளர்கள் மற்றும் கேபின் பணியாளர்கள் அதிக அளவில் இருப்பதாகவும், ஆனால் விமானப் பொறியாளர்கள் மற்றும் விமானிகள் பற்றாக்குறை இருப்பதாகவும் அவர் கூறினார். விமானப் போக்குவரத்துத் துறையில் வேலை வாய்ப்புகளை வழங்குவோம் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here