சாலை தடுப்பில் நிற்காமல் சென்ற இருவர் கைது – போதைப்பொருட்களும் பறிமுதல்

கோலாலம்பூர்: டாமன்சாரா-பூச்சோங் விரைவுச் சாலையின் KM16 இல் போக்குவரத்துக்கு எதிராக வாகனம் ஓட்டி சாலைத் தடுப்பைத் தவிர்க்க முயன்ற இருவரை 35 கிலோமீட்டர்  விரட்டி சென்று போலீசார் கைது செய்தனர். பெட்டாலிங் ஜெயா மாவட்டத்தின் நடமாடும் ரோந்துப் பிரிவைச் சேர்ந்தவர்கள் சந்தேகத்திற்கு இடமான இரண்டு பேர் ஓட்டிச் சென்ற புரோட்டான் சத்ரியாவை துரத்திச் சென்ற அவர்கள் போலீஸ் எம்பிவி மற்றும் மோட்டார் சைக்கிளை மோத முயன்றதாக பெட்டாலிங் ஜெயா காவல்துறைத் தலைவர் ஏசிபி ஷாருல்நிஜாம் ஜாஃபர் தெரிவித்தார்.

30 மற்றும் 29 வயதுடைய சந்தேக நபர்கள் 30 நிமிட துரத்தலுக்குப் பிறகு ஆரா டமன்சாராவில் உள்ள ஜாலான் PJU 1a/1 இல் தடுத்து வைக்கப்பட்டதாக அவர் கூறினார். அவர்களின் வாகனத்தில் சுமார் 12.87 கிராம் எடையுள்ள மெத்தம்பேத்தமைன் என நம்பப்படும் போதைப் பொருளும்,  மின்சார அதிர்ச்சி அலை சாதனம் என நம்பப்படும் ஆயுதமும் கண்டுபிடிக்கப்பட்டது. வாகன சென்ற முதல் சந்தேக நபரிடம் 11 முந்தைய குற்றவியல் மற்றும் ஐந்து போதைப்பொருள் தொடர்பான பதிவுகள் உள்ளன. இரண்டாவது சந்தேக நபருக்கு ஒரு முன் தண்டனை உள்ளது என்று அவர் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

குற்றவியல் சட்டத்தின் 307/186/279, அரிக்கும், வெடிக்கும் மற்றும் ஆபத்தான ஆயுதங்கள் சட்டத்தின் பிரிவு 7, ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 39A(1) மற்றும் பிரிவு 42(1) ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக ஷாருல்நிஜாம் கூறினார்.  சம்பவம் தொடர்பான ஏதேனும் தகவலுக்கு பொதுமக்கள் அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது பெட்டாலிங் ஜெயா மாவட்ட செயல்பாட்டு அறையை 03-79662222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here