புஷ்பகம் ஆய்வுக்கு உட்படுத்தப்படாத அல்லது சாலை வரி இல்லாத லோரிகளுக்கு டீசல் மானியம் இல்லை

கோலாலம்பூர்:

டீசல் மானியம் பெறுவதற்கு வாகனப் பராமரிப்புப் பதிவுகள் தேவை என்ற பரிந்துரையை லோரி நடத்துநர்கள் வரவேற்றுள்ளனர்.

வணிக வாகனங்கள் சாலையோரமாக இருப்பதையும், சாலை வரி, பாதுகாப்பு நெறிமுறைகளை அதன் நடத்துனர்கள் கடைபிடிப்பதை உறுதிசெய்வதற்கும் இந்த முயற்சி மிகவும் முக்கியமானது என்று
மலேஷியா டிப்பர் லோரி ஆபரேட்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டான் பூன் ஹிங் கூறினார்.

“புஷ்பகம் ஆய்வுக்கு உட்படுத்தப்படாத அல்லது சாலை வரி இல்லாத லோரிகளுக்கு, டீசல் மானியத்தை வழங்காது இருப்பது பொருத்தமானது” என்று டான் கூறினார்.

இதுபோன்ற லோரிகள் எஞ்சின் அல்லது சேஸ் எண்களில் பெரும்பாலும் முரண்பாடுகளைக் கொண்டிருக்கும். அல்லது லோரி சாலை வரி இல்லாமல் இருந்தால், அது வழக்கமாக தீர்க்கப்படாத சம்மன்கள் அல்லது பிற சிக்கல்களைக் கொண்டிருக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் கீழ், அனைத்து வணிக வாகனங்களும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை புஸ்பகத்தில் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதை அவர் நினைவூட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here