மலாக்காவில் 21 வினாடிகளில் நடந்தேறிய கொள்ளை சம்பவம்

மலாக்கா:   பண்டார் ஹிலிரில் உள்ள நெரிசலான வணிக வளாகத்தில் உள்ள  நகைக் கடையில் நடந்த கொள்ளை சம்பவம், கடைக்காரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மாநில அளவிலான புத்தாண்டிற்கு தயாராகும் வகையில், வணிக வளாகத்துக்குச் செல்லும் சாலை முன்கூட்டியே மூடப்பட்டிருந்தபோது, வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில், கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.

ஒரு நிமிடம் 21 வினாடிகள் நீடிக்கும் வைரலான இரகசிய கண்காணிப்பு கேமிரா பதிவில், இரண்டு கொள்ளையர்கள் தொப்பிகள், கருப்பு ஜாக்கெட்டுகள் மற்றும் முகமூடிகள் அணிந்து கடைக்குள் நுழைவதைக் காட்டுகிறது.

பணியில் இருந்த இரண்டு பெண் ஊழியர்களை மிரட்டும் வகையில், கூரிய ஆயுதங்களைக் காட்டி மிரட்டிய கொள்ளையர்கள், கவுன்டரில் காட்சிப்படுத்திய நகைகளை அவர்களிடம் ஒப்படைக்குமாறு கூறியதாக நம்பப்படுகிறது.

காட்சிகளில் இருந்து ஒரு ஸ்கிரீன்ஷாட்டில், சந்தேக நபர்களில் ஒருவர் நகைகளைப் பறிக்க கவுண்டரை எட்டுவதைக் காணலாம், அதற்கு முன்பு அதிகமான பொருட்களைக் கைப்பற்றத் குதித்தார். இரு கொள்ளையர்களும் வளாகத்தை விட்டு தப்பிச் செல்வதற்கு முன்பு பயந்துபோன ஊழியர்கள் தங்களை காப்பாற்றி கொள்ள கொள்ளையர்களிடம் இருந்து ஒதுங்கினர்.

மலாக்கா தெங்கா காவல்துறைத் தலைவர் கிறிஸ்டோபர் பாடிட், நேற்று தொடர்பு கொண்ட போது, ​​கொள்ளை நடந்ததை உறுதி செய்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here