தொடக்கப் பள்ளி மாணவர்ஆசிரியரால் தாக்கப்பட்டதாக கூறப்படுவது குறித்து போலீசார் விசாரணை

பேராக், பாகன் செராய் நகரில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளி மாணவர் ஒரு ஆசிரியரால் தாக்கப்பட்டதால் காயமடைந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. கிரியான் காவல்துறைத் தலைவர் ஜூனா யூசோஃப், இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 323 இன் கீழ் வேண்டுமென்றே காயப்படுத்தியதற்காக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும், விசாரணை அறிக்கை துணை அரசு வழக்கறிஞருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி, மாணவனின் தாயிடமிருந்து காவல்துறைக்கு ஒரு புகார் கிடைத்தது.   தனது குழந்தை 30 வயது ஆண் ஆசிரியரால் தாக்கப்பட்டதால் காயமடைந்ததாகக் கூறினார். இருப்பினும், 40 வயது பெண் அடுத்த நாள் காவல் அறிக்கையை வாபஸ் பெற்றார், இந்த விஷயத்தை நீடிக்க விரும்பவில்லை என்று அவர் கூறியதாக  பெர்னாமா  செய்தி வெளியிட்டிருந்தது.

அந்தப் பெண் சமீபத்தில் காவல்துறையிடம் விசாரணையைத் தொடரவும், ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவும் கேட்டு ஒரு புதிய புகாரினை தாக்கல் செய்ததாக ஜூனா கூறினார். தனது 12 வயது மகன் தனது ஆசிரியரால் அறைந்து தாக்கப்பட்டதால் காயமடைந்ததாகவும், அதன் விளைவாக காது மூளையதிர்ச்சி ஏற்பட்டதாகவும் அந்தப் பெண் முன்பு கூறியிருந்தார்.

இந்த சம்பவம் தனது மகனின் தேசிய நீச்சல் வீரராக வேண்டும் என்ற கனவை தகர்த்தெறிந்ததாகவும், ஜூலை மாதம் தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெறும் அனைத்துலக அரங்கில் போட்டியிடும் நம்பிக்கையை கைவிட வேண்டியிருந்ததாக அவர் ஒரு பேஸ்புக் பதிவில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here