கோலாலம்பூர்:
சீனப் புத்தாண்டு (CNY) கொண்டாட்டங்களுக்காக சுமார் 318,000 வாகனங்கள் மலாக்காவிற்குள் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மலாக்கா இடைக்கால காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் நஸ்ரி ஜவாவி கூறினார்.
சிம்பாங் ஆம்பாட் டோல் பிளாசா வழியாக 103,000 வாகனங்கள், அயர் கெரோ டோல் பிளாசா வழியாக 172,000 வாகனங்கள் மற்றும் ஜாசின் டோல் பிளாசா ஊடாக 43,000 வாகனங்கள் மாநிலத்திற்கும் நுழையும் என்று அவர் கூறினார்.





















