கோலாலம்பூர்:
மலேசியாவிற்குள் நுழைவதற்கு விண்ணப்பித்துள்ள சுமார் 18,000 பேரில் முதல் கட்டமாக மொத்தம் 7,964 வங்காளதேச தொழிலாளர்கள் மலேசியாவிற்குள் நுழைவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று யுனைடெட் நியூஸ் ஆஃப் வங்காளதேசம் (UNB) தெரிவித்துள்ளது.
வங்காளதேச வெளியுறவு அமைச்சகத்தில் நேற்று (ஜனவரி 27) நடந்த வாராந்திர ஊடக சந்திப்பின் போது இந்த தகவலை அது உறுதிப்படுத்தியது.
கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி மலேசியாவிற்கான வங்காளதேச தூதர் கோலாலம்பூரில் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுதியோன் இஸ்மாயிலுடன் நடந்த சந்திப்பில், முதன்மையாக கிட்டத்தட்ட 18,000 வங்காளதேச தொழிலாளர்களின் மலேசியாவிற்குள் தருவிக்கப்படுவார்கள் என்று
அமைச்சக செய்தித் தொடர்பாளர் முகமட் ரஃபிகுல் ஆலம் கூறினார்.
குறித்த கலந்துரையாடலின் அடிப்படையில், தொழிலாளர்களின் கட்டம் கட்டமான நுழைவை விரைவுபடுத்த ஒரு கூட்டு தொழில்நுட்பக் குழுவை உருவாக்க வேண்டும் என்றும், அதேநேரம் இந்தக் குழுவில் குடிநுழைவுத் துறை மற்றும் வங்காளதேச தூதரகத்தின் பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்றும் சைஃபுதீன் கூறினார்.
குறித்த குழு நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, டிசம்பர் 31, 2024 மற்றும் ஜனவரி 14, 2025 ஆகிய தேதிகளில் இரண்டு கூட்டங்கள் நடத்தப்பட்டன, அங்கு 17,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் பட்டியல் முழுமையாக மதிப்பாய்வு செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டது.
இந்த செயல்முறையின் விளைவாக முதல் கட்டமாக நாட்டிற்குள் உடனடி நுழைவுவதற்கு தயாராக 7,964 தொழிலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்று ஆலம் கூறினார்.




















