சவுதி அரேபியாவில் சாலை விபத்து: 9 இந்தியர்கள் பலி

சவுதி அரேபியாவின் மேற்குப் பகுதியில் உள்ள ஜிசான் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 9 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த தகவலை ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், முழு ஆதரவு அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

“சாலை விபத்தில் 9 இந்தியர்கள் உயிரிழந்ததற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். விபத்து தொடர்பாக தகவல் அறிய ஒரு பிரத்யேக உதவி எண் அமைக்கப்பட்டுள்ளது” ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் “விபத்து மற்றும் உயிர் இழப்பு குறித்து அறிந்து துயரமடைந்தேன். ஜெட்டாவில் உள்ள தூதர அதிகாரியிடம் பேசினேன். அவர் பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் தொடர்பில் உள்ளார். இந்த துயரமான சூழ்நிலையில் முழு ஆதரவையும் வழங்கி வருகிறார் என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்” என எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here