நாடு முழுவதும் மோட்டார் வாகன பரிசோதனைகளை வழங்க மூன்று புதிய நிறுவனங்கள் அறிமுகம்

கோலாலம்பூர்:

Puspakom நிறுவனத்துடன் இணைந்து மோட்டார் வாகனங்களை பரிசோதனை செய்யும் சேவைகளை வழங்குவதற்காக மூன்று புதிய நிறுவனங்களை அரசாங்கம் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

வரும் மார்ச் 17, 2023 அன்று, சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 [சட்டம் 333] இன் கீழ் கட்டாய ஆய்வுகளை செய்வதற்கு தகுதி வாய்ந்த பிற நிறுவனங்களுக்கும் அனுமதியளிக்கும் அமைச்சரவை முடிவைத் தொடர்ந்து, சிலாங்கூர், ஜோகூர், கிளந்தான், பகாங் மற்றும் சரவாக் ஆகிய இடங்களில் உள்ள நிறுவனங்கள் இந்த சேவையை தொடங்கும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.

“முன்னர் அறிவித்தபடி, போக்குவரத்து அமைச்சகம் (MOT) மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை (RTD) ஆகியவை தகுதிவாய்ந்த நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேவைகள், விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளை உருவாக்கி, அதனை நிறுவியுள்ளன.

இந்த நிறுவனங்களை தேர்ந்தெடுப்பதற்கான “விண்ணப்ப செயல்முறை கடந்த ஜூலை 1, 2024 முதல் அக்டோபர் 31, 2024 வரை திறந்திருந்தது. இந்த காலகட்டத்தில், மோட்டார் வாகன ஆய்வு சேவை வழங்குநர்களாக மாற ஆர்வமுள்ள நிறுவனங்களிடமிருந்து RTD 12 விண்ணப்பங்களைப் பெற்றது என்றும் அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here