ஜசெகவின் மூத்தத் தலைவர் லிம் குவான் எங்கின் உதவியாளர் ஒருவர் பினாங்கு மாநில ஜசெக தலைவர் ஸ்டீவன் சிம்மை கடந்த சனிக்கிழமை நடந்த ஒரு நிகழ்வின் போது, திட்டிய சம்பவம் குறித்து ஜசெகவிற்கு இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை என்று அதன் பொதுச் செயலாளர் லோக் சியூ ஃபூக் கூறுகிறார். டான் கோங் சோங் மீது புகார் அளிக்கப்பட்டால், ஒழுங்கு நடவடிக்கைக் குழு இந்த விவகாரத்தை விசாரிக்க உரிய நடைமுறையைப் பின்பற்றும் என்று லோக் கூறினார். ஆனால் சம்பந்தப்பட்ட நபரை (டான்) பொறுத்தவரை, அவர் மன்னிப்பு கேட்டார். மேலும் அவர் (சிம்) மீது கத்திக் கேட்ட நபரும் தனது மன்னிப்பை ஏற்றுக்கொண்டார் என்று லோக் இன்று நிஞ்ஜாகோல்ட் நிகழ்வை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
தனது செயல்களுக்கும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட விஷயங்களுக்கும் வருத்தம் தெரிவித்து டான் திங்களன்று ஒரு அறிக்கையை வெளியிட்டார். சிம் விருந்தில் ஆதரவாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அவரை துரோகி என்று கூறி அவர் மீது மோசமான வார்த்தைகளை வீசியதாகக் கூறப்படுகிறது. அவர் சிம்மை அணுகி கிட்டத்தட்ட 10 வினாடிகள் அவரைத் திட்டினார். அதனால் டான் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்த போதிலும், சிம் இந்த சம்பவத்தை “தேநீர் விருந்ந்தில் ஒரு புயல்” என்று கூறியிருந்தார்.









