ஐபிஎல் 18ஆவது சீசன் 2ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடியது.
இப்போட்டியில், ஜோப்ரா ஆர்ச்சர் சிறப்பாக பந்துவீசவில்லை. 12.5 கோடிக்கு வாங்கப்பட்ட ஆர்ச்சர், முதல் போட்டியிலேயே 4 ஓவர்களில் 76 ரன்களை விட்டுக்கொடுத்து சொதப்பினார். ஆர்ச்சர், காயத்தில் இருந்து மீண்டு வந்தப் பிறகு, சொதப்பலாகதான் பந்துவீசி வருகிறார்.
இந்நிலையில், ஆர்ச்சர் அப்படி ஓவருக்கு சராசரியாக 19 ரன்களை விட்டுக்கொடுத்து சொதப்பியது குறித்து பேசிய ஐபிஎல் 2025 தொடரின் வர்ணனையாளர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங், நிறவெறியுடன் பேசியிருப்பதாக குற்றச்சாட்டு எழுத்துள்ளது.
வர்ணனையின்போது ஆர்ச்சர் குறித்துப் பேசிய ஆர்ச்சர், ‘‘லண்டன் கருப்பு டாக்ஸியின் மீட்டர் அதிகமாக இருக்கும். அதேபோல், ஆர்ச்சரின் மீட்டரும் அதிகமாக இருக்கிறது’’ என அவர் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தது குறித்து விமர்சித்தார். இது தற்போது, விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
ஹர்பஜன் சிங் இந்திய அணிக்காக விளையாடியபோது, சிலமுறை இனவெறியை எதிர்கொண்டதாக அவரே முன்பு பேசியிருந்தார். இந்நிலையில், அவரே தற்போது இனவெறி கருத்தை தெரிவித்திருப்பதாக ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இதற்கு ஹர்பஜன் சிங் இன்னமும் மன்னிப்பு கேட்கவில்லை.
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக முதலில் களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில், ஒன்டவுன் பேட்டர் இஷான் கிஷன் 45 பந்தில் சதம் அடித்து வியக்க வைத்தார். மொத்தம், 47 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் உட்பட 106 ரன்களை குவித்து அசத்தினார். ஓபனர் டிராவிஸ் ஹெட்டும் 31 பந்தில் 67 ரன்களை பறக்கவிட்டு, ஸ்கோரை கிடுகிடுவென உயர்த்தினார்.








