சனி அமாவாசை: பித்ரு தோஷம் நீங்கி, முன்னோர்களின் ஆசி கிடைக்க

இந்த ஆண்டு பங்குனி மாத அமாவாசை மார்ச் 29ம் தேதி சனிக்கிழமை அமைந்துள்ளது. அதனால் இதை சனி அமாவாசை என அழைக்கிறோம். இந்த நாளில் சனி பகவானை வழிபடுவதும், சனி பகவானுக்குரிய பரிகாரங்களை செய்வதும் சிறப்பானதாகும். சனி பகவான், கர்மகாரகன் என்பதால் அவருக்குரிய சனிக்கிழமையில் வரும் அமாவாசையில் பரிகாரங்கள் செய்வதால் பித்ருதோஷத்தில் இருந்து நிவாரணம் பெற முடியும். ஜாதகத்தில் சனியின் நிலை சரி இல்லாதவர்கள், சனியால் பலவிதமான துன்பங்களை அனுபவித்து வருபவர்களும் இந்த நாளில் பரிகாரங்கள் செய்யலாம்.

சனி அமாவாசை அன்று சனி பகவானை வழிபடுவதும், சனி பகவானுக்குரிய மந்திரங்களை உச்ச்ரிப்பதாலும் பித்ரு தோஷத்தில் இருந்து விடுபடுவதுடன், முன்னோர்களின் ஆசியையும் பெற முடியும். மார்ச் 29ம் தேதி அன்று சனிப் பெயர்ச்சியும் நடைபெற உள்ளதால் இந்த நாளில் சனி பகவான் வழிபாடு நமக்கு நன்மைகளை தரும். இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பம் கொடுப்பதும், விளக்கேற்றி வழிபடுவது, ஏழைகளுக்கு எள் தானம் அளிப்பது, பசு மற்றும் பறவைகளுக்கு உணவு அளிப்பது ஆகியவை நம்முடைய முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடைய செய்யும். இதனால் முன்னோர்களின் சாபமும் நீங்கும்.

 

சனி அமாவாசையில் செய்ய வேண்டியது :

 

* சனி அமாவாசை அன்று எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் செய்யும் போது “ஓம் பித்ராப்யா ஸ்வாதயிப்யா ஸ்வாஹா” என்ற மந்திரத்தை 11 அல்லது 21 முறை சொல்லுவது நல்லது.

* “ஓம் தத்புருஜாய வித்மஹே, மஹாமிருத்யுஞ்ய தீமஹி, தன்னோ பித்ரு பிரச்சோத்யாத்” என்ற மந்திரத்தை கூறலாம்.

* “ஓம் நமோ பகவதே வாசுதேவாய பித்ரு தோஷ நிவாரணாய ஸ்வாஹா” என்ற மந்திரத்தை சொல்வதால் பித்ருதோஷத்தில் இருந்து விடுபடலாம்.

* “ஓம் பித்ரு தேவதாயை நமஹ” என்ற மந்திரத்தை ஜபம் செய்வதும் சிறப்பு.

* “ஓம் தேவதாப்யா: பித்ராப்யா ச மஹாயோகிப்யா ஏவ ச, நமோ ஸ்வாஹாயை ஸ்வாதாய் நமோ நமோ” என்ற மந்திரத்தை தினமும் சொல்ல வேண்டும்.

* சனி அமாவாசை அன்று அனுமனை வழிபட்டு, அனுமன் சாலிசா, சுந்தரகாண்டம் படிப்பதும் சனிதோஷத்தையும், பித்ருதோஷத்தையும் நீக்கும்.

* அரச மரத்தில் கீழ் விளக்கேற்றி, சனி மந்திரம் ஜபிப்பதன் மூலம் ஜாதகத்தில் சனியால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

* சனிக்கு மிகவும் உகந்த எள், எண்ணெய், கருப்பு வஸ்திரங்கள், குடை, போர்வை, செருப்பு, இரும்பு பாத்திரங்கள் போன்றவற்றை தானமாக வழங்குவதும் நல்லது.

* சனி அமாவாசையில் ஏழைகளுக்கு உணவு தானம் வழங்குவதும் மங்கரமானதாக கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here