துஷ்ட சக்திகளிடம் இருந்து விடுபட அனுமன் மந்திரம்.

இருள் அதிகமாக சூழும் சமயத்தில் தான் துஷ்ட சக்திகளின் நடமாட்டமும் அதிகமாக இருக்கும் என்று சொல்லுவார்கள். இருள் அதிகமாக சூழ்ந்திருக்கும் அமாவாசை தினத்திலும் கெட்ட சக்திகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.
இந்த கெட்ட சக்திகளிடம் இருந்து நம்மை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான் முன்னோர் வழிபாடு, குலதெய்வ வழிபாட்டை எல்லாம், அமாவாசை திதி அன்று செய்ய வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். இதன் அடிப்படையில் உங்களுடைய வீட்டில் ஏதேனும் துர்சக்திகளால் பிரச்சனைகள் இருந்தால், வீட்டில் இருப்பவர்கள் துர் சக்திகளால் பாதிக்கப்பட்டிருந்தால், வரும் அமாவாசை நாளில் அனுமனது இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை சொல்லுங்கள். உங்களுடைய துன்பங்கள் உங்களை விட்டு சீக்கிரமாக விலகும்.
வீட்டில் யாரேனும் கெட்ட சக்தியால் பாதிக்கப்பட்டு, பிரம்மை பிடித்தது போல இருக்கிறார்கள் என்றாலும், இந்த பரிகாரத்தை செய்யலாம். அல்லது துஷ்ட சக்திகளின் ஆதிக்கத்தால் ரொம்பவும் ஆக்ரோஷமாக இருப்பவர்களை
அடக்குவதற்கும் இந்த பரிகாரத்தை செய்யலாம். நாளைய தினம் 29-3-2025 இந்த அமாவாசை திதியோடு சூரிய கிரகணமும் வரவிருக்கிறது.

சனி பெயர்ச்சியும் நடக்கவிருக்கிறது. ஆக இந்த நாள் அதிசக்தி வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. நாளை, சூரிய உதயத்திற்கு பிறகு முன்னோர்கள் வழிபாட்டை எல்லாம் முடித்துவிட்டு, சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு இந்த மந்திரத்தை படியுங்கள்.

பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, அனுமனை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
பிறகு பாதிக்கப்பட்டவர்களால் இந்த மந்திரத்தை படிக்க முடியும் என்றாலும் படிக்கலாம், அல்லது பாதிக்கப்பட்டவர்களை  பூஜை அறையில் அமர வைத்துவிட்டு, மற்றொருவர் இந்த மந்திரத்தை படித்து பாதிக்கப்பட்டவருடைய காதுகளில் இந்த மந்திரம் விழும் படி செய்யலாம். அனுமனை நினைத்து இந்த மந்திரத்தை அமாவாசை தினத்தன்று படித்தால் தீய சக்திகளில் இருந்து விடுபடக்கூடிய பாக்கியம் உங்களுக்கு கிடைக்கும். அவ்வளவு தான். தீய சக்திகளை விரட்டி அடிக்கும் ஹனுமன் மந்திரம் இதோ உங்களுக்காக.
ஹனுமன் மந்திரம்
அஞ்ஜனா கர்ப்ப ஸம்பூதம்
குமாரம் ப்ரும்ஹ சாரிணம்
துஷ்ட க்ரஹ வினாசயா
ஹனுமந்த முபாஸ் மஹே!

சனிக்கிழமை மாலை பூஜை அறையில் விளக்கு ஏற்றி எவர் ஒருவர் இந்த மந்திரத்தை படிக்கிறார்களோ, அவர்கள் உடம்பில் இருக்கும் கெட்ட சக்தியும் சரி, அவர்கள் வீட்டில்

இருக்கும் கெட்ட சக்தியும் சரி, உடனடியாக வெளியேறும். நம்பிக்கை உள்ளவர்களுக்கு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவு நல்ல பலனை தரும் என்ற இந்த தகவலுடன் இன்றைய ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here