கோலாலம்பூர்:
மலேசியாமீது டிரம்ப் அரசாங்கம் விதித்த வரி குறித்து விவாதிக்க இம்மாத இறுதியில் முதலீட்டு, வர்த்தக, தொழில் அமைச்சரும் இரண்டாம் நிதியமைச்சருமான தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் அமெரிக்கா செல்லவிருப்பதாக தகவல் தொடர்பு அமைச்சர் தெரிவித்தார்.
மற்ற நாடுகளின்மீது அமெரிக்கா விதித்துவரும் வரி தொடர்பான பிரச்சினைகளைக் கூட்டாக அணுக ஆசியான் உறுப்பு நாடுகளிடையே எட்டப்பட்ட ஒருமித்த கருத்தின் அடிப்படையில் அப்பயணம் அமையும் என அரசாங்க பேச்சாளரும் அமைச்சருமான ஃபஹ்மி ஃபட்சில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
மேலும், அமைச்சர்கள் அமெரிக்கா சென்று திரும்பியதும் விவாதத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து விவரங்கள் அறியலாம் என அவர் சொன்னார்.
டிரம்ப்பின் வரி விதிப்புக் கொள்கையால் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான வரிகள் ஜூலை மாதம் வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, மலேசியா 24% வரி விதிப்பை எதிர்நோக்குகிறது.