கோலாலம்பூர்:
இன்று புதன்கிழமை (ஏப்ரல் 23) மாலை 6 மணி வரை 11 மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை, பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த வானிலை பெர்லிஸ், கெடா (லங்காவி, குபாங் பாசு, பாடாங் தெராப், சிக், பாலிங், கூலிம் மற்றும் பண்டார் பாரு), பினாங்கு (வடக்கு, மத்திய மற்றும் தெற்கு செபராங் பிறை), பேராக் (கெரியான், லாரூட், மாடாங் மற்றும் செலாமா, உலு பேராக், கோலா உலு பேராக், பாடாங் மற்றும் முஅல்லிம்), கிளந்தான் (மச்சாங், பாசிர் பூத்தே, கோலாக்கிராய் மற்றும் குவா மூசாங்), திரெங்கானு, பகாங், சிலாங்கூர் (உலு சிலாங்கூர் மற்றும் கோம்பாக்), மற்றும் ஜோகூர் (மெர்சிங் மற்றும் கோத்தா திங்கி).
மேலும் சரவாக்கில், லிம்பாங் பகுதி, சபாவில், பாதிக்கப்பட்ட பகுதிகள் உள்துறை (சிபிடாங், தெனோம், பியூஃபோர்ட் மற்றும் தம்புனான்), மற்றும் மேற்கு கடற்கரை (துவாரன், ரனாவ் மற்றும் கோத்தா பெலுட்) ஆகிய இடங்களுலும் இந்த வானிலை நிலவும் என்று அது தெரிவித்துள்ளது.
தர்போதைய வானிலை தொடர்பான புதுப்பிக்கப்பட்ட தகவல்களை பொதுமக்கள் www.met.gov.my அல்லது MetMalaysia இன் அதிகாரப்பூர்வ சமூக ஊடக சேனல்களைப் பார்வையிட்டோ அல்லது myCuaca பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்து அதில் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று மெட் மலேசியா அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.