ஜார்ஜ்டவுன்,
உள்நாட்டு வருமான வாரியத்தின் (HASL) ஏற்பாட்டில் பினாங்கு மெனாரா HASiL மண்டபத்தில் நடைபெற்ற ஹரிராயா பெர்டானா திறந்த இல்ல உபசரிப்பில் பினாங்கு மாநில ஆளுநர் துன் டத்தோஸ்ரீ உத்தாமா அமாட் ஃபூஸி ஹாஜி அப்துல் ரசாக் கலந்துகொண்டார்.
மிகவும் மகிழ்ச்சிகரமான சூழலில் எழுச்சியுடன் நடைபெற்ற இந்த விருந்துபசரிப்பில் பினாங்கு ஹசில் பணியாளர்கள், அதிகாரிகள், தலைமை நிர்வாக அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் அபு தாரிக் ஜமாலுடின், துணைத் தலைமை நிர்வாக அதிகாரி (நிர்வாகம்) கைருல் ஹலிமின் அப்துல் ஹலிம், துணைத் தலைமை நிர்வாக அதிகாரி (வரி நடவடிக்கை), ஷாருடி ஒஸ்மான், துணைத் தலைமை நிர்வாக அதிகாரி (சிறப்புப் பிரிவு), அமாட் கைருடின் அப்துல்லா, அழைக்கப்பட்ட பிரமுகர்கள், அரசாங்க ஏஜென்சிகள், தனியார் துறை பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
அதேசமயத்தில் ஹசில் நலத் திட்டத்தின் கீழ் உதவிகளும் வழங்கப்பட்டன. மாநில ஆளுநர் அதனை எடுத்து வழங்கினார். உள்நாட்டு வருமான வரி வாரியத்தின் செயல்பாடுகள், பங்களிப்புகள் மீது பல்வேறு தரப்பினர் மன நிறைவு கொள்ளும் அளவில் உள்ளது என்று டத்தோ டாக்டர் அபுதாரிக் தம்முடைய உரையில் தெரிவித்தார்.
இதன் செயல் நடவடிக்கைகள் விரிவாக்கம் கண்டு வருமானத்தை அதிகரிப்பதில் மத்திய அரசாங்கத்திற்கு உதவியாக ஹசில் செயல் படும் என்று குறிப்பிட்டார். சாரா ரொக்க உத வித் திட்டம் உட்பட மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை மத்திய அரசாங்கம் வழங்குவதற்கு இந்த வரிப் பணம் பெரும் பங்களிப்பு வழங்குகிறது. 2025 மார்ச் 18ஆம் தேதி வரை பினாங்கில் மொத்தம் 437,896 பேர் எஸ்டிஆர் ரொக்க உதவித் தொகையை பெற்றிருக்கின்றனர். அதேசமயம் சாரா திட்டத் தின் கீழ் 32,734 பேர் உதவி பெற்றிருக்கின் றனர். உதவித் தேவைப்படுவோருக்கு இந்த உதவிகள் சரியாகச் சென்று அடைவதை உறுதி செய்வ தில் அரசாங்கம் எப்போதும் அக்கறையும் செயல்பட்டு வருகிறது என்பதற்கு இது ஒரு சிறந்த முன்னுதாரணம் என்று அபு தாரிக் குறிப்பிட்டார்.