காஜாங்கில் பெண் மற்றும் அவரது மருமகன் இறந்து கிடக்க கண்டெடுப்பு

காஜாங்:

செமினியில் உள்ள அவர்களது வீட்டில் 53 வயது பெண் மற்றும் அவரது 25 வயது மருமகன் ஆகியோர் உயிரிழந்த நாளையில் கண்டெடுக்கப்பட்டனர்.

வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 25) இரவு 8.43 மணியளவில் வீட்டில்துர்நாற்றம் வீசியதால், பெண்ணின் தம்பி போலீசில் புகார் அளித்ததாக காஜாங் மாவட்ட காவல்துறை தலைவர் துணை ஆணையர் நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் தெரிவித்தார்.

“பாதிக்கப்பட்ட பெண்ணின் தம்பி அவர்களை அழைத்தபோது எந்த பதிலும் இல்லாததாலும், பாதிக்கப்பட்ட இருவரும் சுமார் 10 நாட்களாக வெளியே காணப்படாததால் அவர் சந்தேகப்பட்டார்,” என்று அவர் கூறினார்.

தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவியுடன், போலீசார் வீட்டிற்குள் நுழைந்து, பாதிக்கப்பட்ட இருவரும் பிரதான அறையில் உயிரற்ற நிலையில் கிடப்பதைக் கண்டனர் என்று அவர் கூறினார்.

“வீடு கொள்ளையடிக்கப்பட்டதற்கான எந்த அறிகுறிகள் எதுவும் இல்லை, ஏனெனில் வீடு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது,” என்று அவர் மேலும் கூறினார்.

போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக கூறிய அவர், இவ்வழக்கில் இதுவரை “யாரும் கைது செய்யப்படவில்லை என்றார், இருப்பினும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சாட்சிகளிடமிருந்து மேலும் வாக்குமூலங்களை எடுத்து வருகிறோம்,” என்று அவர் கூறினார்.

சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில், பாதிக்கப்பட்ட இருவரும் மூச்சுத் திணறலால் இறந்ததாக முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே இவ்வழக்கை “கொலைக்கான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் இந்த விஷயத்தை நாங்கள் விசாரித்து வருகிறோம்,” என்று அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here