ஜோகூரில் ஒரு வாரத்தில் HFMD நோய்த்தொற்று திடீரென அதிகரிப்பு

ஜோகூர் பாரு:

ஜோகூரில் ஒரு வாரத்தில் கை, கால் மற்றும் வாய் நோய் (HFMD) தொற்றுக்கள் ஆபத்தான அளவில் 20.5% அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு 17வது தொற்றுநோயியல் வாரத்தில் 1,441 நோய்த்தொற்றுக்கள் பதிவாகியுள்ளதாகவும், அதற்கு முந்தைய வாரம் 1,196 நோய்த்தொற்றுக்கள் மட்டுமே பதிவாகியுள்ளதாகவும் ஜோகூர் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் குழுத் தலைவர் லிங் தியான் சூன் தெரிவித்தார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, மாநிலத்தில் தொற்றுகளின் எண்ணிக்கை எச்சரிக்கை அளவைத் தாண்டியுள்ளது, இது 2023 மற்றும் கடந்த ஆண்டு இரண்டிலும் பதிவு செய்யப்பட்ட மொத்த தொற்றுக்களை விட அதிகமாகும் என்று அவர் கூறினார்.

ஜோகூரில் தங்காக், கோத்தா திங்கி மற்றும் பொந்தியான் ஆகிய மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான HFMD வழக்குகள் பதிவாகியுள்ளன என்று அவர் மேலும் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here