KLIA இல் அரிய வகை குரங்குகள், ஆமைகள் கடத்தல்; இந்திய நாட்டவர்கள் இருவர் மீது குற்றச்சாட்டு

சிப்பாங்:

கோலாலம்பூரிலிருந்து தமிழ்நாட்டிற்கு அரிய வகை குரங்குகள், ஆமைகள் கடத்தி செல்ல முயன்ற குற்றச் இந்திய நாட்டவர்கள் மீது இன்று சிப்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

இந்தியாவின் தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தைச் சேர்ந்த தினேஷ் குமார் செல்வம் என்பவருக்கு எதிரான குற்றச்சாட்டு நீதிபதி அமாட் ஃபுவாட் ஓத்மான் முன் வாசிக்கப்பட்டது, அவர்
இரண்டு குற்றச்சாட்டுளையும் மறுத்து விசாரணை கோரினார்.

மாணவரான அவருக்கு ஆங்கிலம் புரியாததால், நீதிமன்ற மொழிபெயர்ப்பாளரால் குறித்த குற்றச்சாட்டுகளை தமிழில் வாசிக்கப்பட்டது.

முதல் குற்றச்சாட்டாக, சிறப்பு அனுமதி இல்லாமல் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட இனமான கிப்பனை குரங்குகளை ஏற்றுமதி செய்ய முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இரண்டாவது குற்றச்சாட்டாக, சிறப்பு அனுமதி இல்லாமல் பாதுகாக்கப்பட்ட இனமான ஆறு அல்பினோ மஞ்சள் தலை ஆமைகளை ஏற்றுமதி செய்ய முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இரண்டு குற்றங்களும் கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி இரவு 7.15 மணிக்கு KLIA முனையம் 1, கேட் சி34 இல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதே போன்று தமிழ் நாட்டின் பண்போலியைச் சேர்ந்த அப்துல் ஜாஃபர் மொஹிதீன் அப்துல் காதர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here