வெப்பம் மற்றும் வறண்ட வானிலை அடுத்த மாதம் இறுதி வரை தொடரும் என்று (METMalayisia) எனப்படும் மலேசிய வானிலைத்துறை கணித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு பருவமழை காலத்தின் இறுதி வரை இத்தகைய வானிலை நிலைமைகள் ஒரு சாதாரண நிகழ்வு என்று METMalaysia தலைமை இயக்குநர் டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் (Mohd Hisham Mohd Anip) தெரிவித்தார்.
இந்த கால கட்டத்தில், வானிலை பொதுவாக மதிய வேளையில் வெப்பமாகவும், பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் மற்றும் மாலை வேளையில் மழை பெய்யும் என்று அவர் கூறினார்.